பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை – சபாநாயகர்

336 0

திறைசேரி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தொலைபேசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் அவை சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின்; தொலைபேசி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டடுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று சபையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இந்த அறிவிப்பை இன்று விடுத்தார்.

இதற்கமைவாக கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இது குறித்து விரிவாக ஆராயப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்

Leave a comment