அனுராதபுர வைத்தியசாலை பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

555 0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதி மற்றும் மேலதிக சேவைகள் அதிகாரிகள் இன்று ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலதிக வேலை நேர சம்பளத்தை குறைத்தமைக்கு எதிராக குறித்த பணிப் பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, செலுத்தப்படவிருக்கும் மேலதிக சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கை விரல் அடையாளப்பதிவு தொடர்பில் பின்னர் தெளிவுபடுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணிப் பகிஷ்கரிப்பு நிறைவடைந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment