கொக்கட்டிச்சோலையில் இளைஞர் வெட்டிக்கொலை

378 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பனை நீலமடு பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

நீலமடுப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞர் உட்படச் சிலர் இரு சாராரையும் பிரித்து விடுவதற்காகச் சென்றனர். அப்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த இளைஞர் மரணமானார்.

மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment