ஆவா குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது

426 0

ஆவா எனப்படும் குழுவின் மேலும் இரு முக்கிய உறுப்பினர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட வேளை, அதில் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், இவர்களது கையடக்கத் தொலைபேசியில், வாளை வைத்திருப்பது போன்ற புகைப்படங்களும் காணப்பட்டுள்ளன.

Leave a comment