ஸ்ரீல.சு.க.,கூட்டு எதி­ரணி இன்று மீண்டும் பேச்­சு­வார்த்தை

Posted by - November 28, 2017

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் இணைந்து போட்­டி­யி­டு­வது  குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி  மற்றும் பொது எதி­ரணி ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான பேச்­சு­வா­ர்த்தை இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. அந்­த­வ­கையில்   பொது இணக்­கப்­பாடு ஒன்றை இப்­பேச்­சு­வார்த்­தை­களின் ஊடாக ஏற்­ப­டுத்த முடியும் என இரு  தரப்­பி­னரும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர். அடுத்த ஆண்டு ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பொது எதி­ர­ணியும் இணைந்து செயற்­ப­டு­வது குறித்து தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள்  இடம்­பெற்று வந்த போதிலும் இது­வ­ரையில் உறு­தி­யான தீர்­மானம் ஒன்று

சிவனொளிபாதமலை பருவகால ஆரம்பத்தை முன்னிட்டு யாத்திரிகர்களின் வாகனங்கள் தீவிர சோதனை

Posted by - November 28, 2017

சிவனொளிபாதமலை பருவகாலம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலை வரை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தீடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நுவரெலியா மாவட்ட வாகன பரிசோதகர்கள் மற்றும் மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் தொடக்கம் தீடீர் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். சிவனொலிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கு பாதுகாப்பான சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 50 மேற்பட்ட வாகனங்கள் சோதனைக்கு

அபிவிருத்தி மாத்திரம் எண்ணமாக அமையக்கூடாது, முனைப்புடன் செயல்படவேண்டும் – சந்திரிகா

Posted by - November 28, 2017

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு நல்ல குறிக்கோள்கள் இருப்பது மாத்திரமன்றி அவற்றை முனைப்புடன் செயற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்துள்ளனர். வெயன்கொட பத்தலகெதர போதி மங்களராமய விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற விழாவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துரைக்கையில், எண்ணங்கள் என்னை போன்ற தனியொருவரை மட்டும் வளர்ப்பதற்கில்லை, இதனால் எனது பையை நிரப்பவோ அல்லது எனது சகோதரர்கள் பையை நிரப்பவோ அல்ல என்று அவர் குறிப்பிட்டார். எமது குறிக்கோள்கள் எதிர்கால

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமது வாகனங்களுக்குள் நசுக்கிய இரானுவத்தினர்..!!

Posted by - November 28, 2017

கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமது வாகனங்களுக்குள் நசுக்கிய இரானுவத்தினர். கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில் குறித்த மாவீர்ர் துயிலும் இல்லம் முன்பாக மாவீர்ர்நாள் அனுஷ்டிக்கப்படவிருந்த நிலையில் இராணுவத்தினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். அதாவது நேற்று முன்தினம் முதல் மாவீர்ர் துயிலும் இல்லத்திற்கு முன்னாள் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு துயிலுமில்லத்திற்கு செல்லும் வாயிலிலும் இராணுவத்தினர் வாகனங்களை நிறுத்தி தடையேற்படுத்தும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்

கோத்தா மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை!!-சரத் அமுனுகம

Posted by - November 28, 2017

கோத்தபாய ராஜபக்ச மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் அவர் மேலும் கூறினார்

தமிழ், சிங்கள மாணவர்களிடையே பதற்றம்!! யாழ் பல்கலை வவுனியா வளாகம் மூடப்பட்டது!

Posted by - November 28, 2017

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பை மடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள்  பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியுள்ளமையால் முரண்பட்டுக்கொண்ட சிங்கள மாணவாகள் முதல்வரிடம் முறையிட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் குறித்த மாணவாகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் செயற்பட்டு வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் நேற்று பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமது விடுதியில்  இடம்பெற்ற இந்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017

மாவீரர் தின நிகழ்வுகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உணர்வு பூர்வமாக நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்காக தம்மை தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்களுக்கான சுடரேற்றும் நிகழ்வு யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கான சுடரேற்றும் நிகழ்வு மாலை 6:05 மணிக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபையின்

வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017

வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் தலைமையில் மாவீரர் தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர் நா.தயாபரனின் தாயார் நாகேந்திரன் பரமேஸ்வரி, ஈகை சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. வவுனியா குடியிருப்பில் நான்கு மாவீரர் குடும்பங்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கையில் தீபங்களை ஏற்றியிருந்ததுடன் மாவீர்களை நினைவு கூர்ந்து சுட்டிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றியதை

வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர் தின நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017

வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர் தின நிகழ்வு நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு, 6 மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஈகை சுடர் ஏற்றியதை தொடர்ந்து இடம்பெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாவீரர்களின் உறவினர்கள், அப்பகுதி பொது மக்கள் கலந்துகொண்டனர்.

பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வுகள்(காணொளி)

Posted by - November 28, 2017

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் குருநகர் மக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்வு நேற்று மாலை 6.05 மணிக்கு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனொல்ட் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கடல் சிறுத்தைகள் பிரிவில் வீரச்சாவடைந்த மாவீரரின் தந்தை முதன்மைச் சுடரை ஏற்றினார். பெருமளவான பொதுமக்கள் பங்கேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.