கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமது வாகனங்களுக்குள் நசுக்கிய இரானுவத்தினர்..!!

367 0

கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தமது வாகனங்களுக்குள் நசுக்கிய இரானுவத்தினர்.

கோப்பாய் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில் குறித்த மாவீர்ர் துயிலும் இல்லம் முன்பாக மாவீர்ர்நாள் அனுஷ்டிக்கப்படவிருந்த நிலையில் இராணுவத்தினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

அதாவது நேற்று முன்தினம் முதல் மாவீர்ர் துயிலும் இல்லத்திற்கு முன்னாள் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு துயிலுமில்லத்திற்கு செல்லும் வாயிலிலும் இராணுவத்தினர் வாகனங்களை நிறுத்தி தடையேற்படுத்தும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமாலை மாவீர்ர் தின அனுஷ்டிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக துயிலுமில்லம் முன்பாக இரானுவ வாகனங்கள் பல கொண்டு வந்து நிறுத்தப்பட்டு அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இரானுவத்தின் பேருந்து மற்றும் கன்ரர் ரக வாகனமானது இரண்டு வாகனத்திற்கு இடையில் வைத்து நசுக்கும் வகையில் அவர் மீது இராணுவ வாகனத்தை மோதிய வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment