வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
மாலை 6.00 மணிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் தலைமையில் மாவீரர் தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
மாவீரர் நா.தயாபரனின் தாயார் நாகேந்திரன் பரமேஸ்வரி, ஈகை சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வவுனியா குடியிருப்பில் நான்கு மாவீரர் குடும்பங்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கையில் தீபங்களை ஏற்றியிருந்ததுடன் மாவீர்களை நினைவு கூர்ந்து சுட்டிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றியதை தொடர்ந்து மாவீரர் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் நான்கு மாவீரர் குடும்பங்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் தென்னங்கன்று உட்பட உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.