ஒக்கி’ சூறாவளி தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிறப்பு அறிக்கை!

Posted by - December 1, 2017

இலங்கைக்கு அருகில் உருவாகி இருந்த ஒக்கி சூறாவளி, கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 600 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றிருப்பதாக வானிலை அவதான நிலையம் சிறப்பு வானிலை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் , இன்றைய தினத்திலும் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் , தென் மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் சில நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீரற்றக் காலநிலையால்

‘ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை வேண்டும் என்றே முடக்கவில்லை’

Posted by - December 1, 2017

நான் வேண்டும் என்றே ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கவில்லை அது தவறுதலாக நடந்த நிகழ்வு என்று நவம்பர் 2-ம் தேதி ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியவர் என்று கருதப்படும் இளைஞர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு நவம்பர் மாதம் 2-ம் தேதி 10 நிமிடங்கள் தற்காலிகமாக செயலிழந்து இருந்தது. பின்னர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட துவங்கியது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ட்விட்டர்

மிகப் பெரிய ‘வசாங்-15’ ஏவுகணையின் புகைப்படம், வீடியோக்கள் வெளியிட்ட வடகொரியா

Posted by - December 1, 2017

கடந்த ஜூலை மாதம் வசாங் – 14 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து பார்த்தது. நேற்று முன்தினம் அதை விட சக்திவாய்ந்த வசாங் -15 என்ற ஏவுகணையை சோதனை செய்தது. இந்த ஏவுகணையின் 12-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வடகொரியா நேற்று வெளியிட்டது. அவற்றை ஆய்வு செய்த பல நாட்டு நிபுணர்கள், முன்பை விட அதிக சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஏவுகணை என்று அச்சம் தெரிவித்துள்ளனர். வசாங் –

அமெரிக்கா கோரிக்கை: ரஷ்யா மறுப்பு

Posted by - December 1, 2017

ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதால், வடகொரியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: வடகொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதை பாதகமாகவே நினைக்கிறோம். கடும் பொருளாதார தடைகளை விதித்து வடகொரியாவை கோபப்பட தூண்டிவிட்டதே அமெரிக்காதான். தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியாவை அழிக்க அமெரிக்கா நினைக்கிறதா? அமெரிக்காவின் நோக்கம் என்ன? வடகொரியாவை அழிக்க அமெரிக்கா காரணத்தைத் தேடுகிறதா? அப்படி என்றால் அதை அமெரிக்க அதிபர்

கடும் எதிர்ப்புகளை சமாளித்து மதுசூதனனை வேட்பாளராக்கிய ஓபிஎஸ்

Posted by - December 1, 2017

அதிமுகவில் எழுந்த கடும் எதிர்ப்புகளை சமாளித்து தனது ஆதரவாளரான மதுசூதனனை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக்கியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் அறிவிப்பு வெளியான 2-வது நாளே திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் மீண் டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து விட்டார். ஆனால், ஆளும் கட்சியான அதிமுக, நீண்ட இழுபறிக்குப் பிறகே வேட்பாளரை அறிவித்துள்ளது. வேட்பாளரை தேர்வு செய்ய கடந்த 27-ம் தேதி அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதுமே

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Posted by - December 1, 2017

குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘ஒக்கி’ புயலால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 29-ம் தேதி நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 30-ம் தேதி (நேற்று) அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக

பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம்:தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted by - December 1, 2017

இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடந்த 23-ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted by - December 1, 2017

மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் நேற்று 14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 556 டாக்டர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, சென்னையில் கடந்த 17, 18-ம் தேதிகளில் நடந்தது. நேர்முகத் தேர்வில் பங்கேற்ற மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்த டாக்டர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். இதற்கிடையே, இந்த நேர்முகத் தேர்வை ரத்து

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக சாட்சி வழங்கிய சம்பவம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தல்

Posted by - December 1, 2017

சட்டமா அதிபர் திணைக்களத்தினதோ அல்லது குற்ற விசாரணை திணைக்களத்தினதோ ஆலோசனைக்கமையவே அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரரை தொடர்புபடுத்தி சாட்சி வழங்கியிருந்ததாக ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அவற்றில் எந்த நிறுவனம் என்பதை நிச்சயமாக கூற முடியாதுள்ளதாக அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டது. வழக்கின்

ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தது தவறுதான் : பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

Posted by - December 1, 2017

ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்தது தவறுதான் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.ஆனால், இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள “சிறப்பு உறவை” சுட்டிக்காட்டிய தெரீசா, இது தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.