வலிகாமம் வடக்கில் காணி மீள் குடியமர்த்துமாறு கோரிக்கை

363 0

valikamam-415x260யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி உறுதிபத்திரம் உள்ளவர்களை மீள குடியமர்த்துமாறு பாதுபாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் கடந்த ஐ{ன் மாதத்திற்கு முன்னர், மீள் குடியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் அந்த நடவடிக்கை தாமதமாகியிருந்த நிலையில், இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை மீள்குடியேற்றுமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால் தற்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.