அரசாங்கம் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புடன் செயலாற்றுகிறது – பிரதமர்

232 0

அரசாங்கம் என்ற ரீதியில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வைராக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் எவருக்கும் எந்த மதமும் இடமளிக்க கூடாது.

அவ்வாறு செயற்படுமாறு எந்தமதமும் குறிப்பிடவில்லை.

எவராக இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்பட முடியாது.

அரசாங்கம் என்ற வகையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புடன் செயலாற்றுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங் ஹ தெரிவித்துள்ளார்.

Leave a comment