4 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே

233 0

இந்த மாத ஆரம்பத்தில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுள் 4 ஆயிரத்து 2 பேர் இன்னும் முகாம்களிலேயே வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்தும் 82 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவுகள், வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக, 5 மாவட்டங்களில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 621 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

215 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

151 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களின் படி, 3 ஆயிரத்து 29 வீடுகள் முற்றாகவும், 61 ஆயித்து 560 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

Leave a comment