புதிய அரசியல் யாப்பு – மக்கள் கருத்துக்கணிப்பு இந்த வருடம்

213 0

புதிய அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்துக்கணிப்பு இந்த வருடம் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த வருடம் அரசாங்கம் முகம் கொடுக்கு முதலாவது தேர்தலாக, அரசியல் யாப்புக்கான மக்களின் கருத்துக் கணிப்பு அமையும்.

நாடாளுமன்றத்தில் அரசியல்யாப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்படும்.

தற்போது அரசியல் யாப்பு தொடர்பில் பொதுமக்களை தெளிவுப் படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்து வருகின்றன என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.