தலிபான்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 140ஆக உயர்வு

231 0

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களின் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானிய அரச பாதுகப்பு படைகள் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார்-ஐ-சரீப் நகரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டு வெளியேறிய இரணுவத்தினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பத்து தலீபான் தீவிரவாதிகள் பங்குகொண்டதாக, ஆப்கான் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், எஞ்சிய 3 பேரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஆப்கான் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.