சசிக்கலாவும், தினகரனும் அ.தி.மு.கவில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரம் வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

216 0

சசிக்கலாவும், தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுங்கியமைக்கான ஆதாரத்தை, ஓ.பன்னீர்செல்வம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இரண்டாக பிளவடைந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இதற்காக சசிக்கலா தரப்பினால் குழு ஒன்று அமைத்து, பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சசிக்கலா மற்றும் ரீ.ரீ.வி. தினகரன் ஆகியோர் கட்சி மற்றும் அரசாங்க செயற்பாடுகளில் இருந்து வெளியேற இணங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் விலகியதற்கான கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்குமாறு பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.