ஃப்ரான்சின் மத்திய பாரிசில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு காவற்துறை அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
தாக்குதல்தாரியும் சுட்டுக் கொல்லப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2015ம் ஆண்டுக்குப் பின்னர் ஃப்ரான்சில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 238 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஃப்ரான்சில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதுடன், எதிர்வரும் தேர்தலிலும் இந்த விடயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.