காக்கைவன்னியன் போன்ற பலர் எம் மத்தியிலும் உலவுகின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்

221 0

ஆங்கிலேயர்கள் பண்டாரவன்னியனை அன்று தந்திரோபாயமாக வரவேற்று ஏமாற்றியது போல் மத்திய அரசாங்கமும் செயற்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் உருவச்சிலையை திறந்து வைத்து உரையாற்றும்போதே முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்புக்கு சென்றால் பன்டாரவன்னியனுக்கு ஆங்கிலேயர்கள் வழங்கிய வரவேற்பு கிடைப்பதாகவும் ஆனால் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய உரித்துக்களை மத்திய அரசாங்கம் தர மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காக்கை வன்னியன் போல் காட்டிக்கொடுக்கும் சிலர் எம் மத்தியிலும் இருப்பதாகவும் முதலமைச்சர் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.