அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்.(காணொளி)

244 0

 

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாhரிகளினால், அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, காந்தி பூங்கா முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது அன்னை பூபதியின் படத்திற்கு மலரஞ்சலி செய்யப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.

58 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சாத்வீக போராட்டம் மூலம் அகிம்சையினை உலகுக்கு வெளிப்படுத்திய அன்னை பூபதியின் நினைவு தினத்தை அமைதியான முறையில் அனுஸ்டித்தனர்.

இதன்போது பட்டதாரிகளால் தாக சாந்தி நிகழ்வும் நடாத்தப்பட்டதுடன், அன்னை பூபதி தொடர்பான உரையும் நிகழ்த்தப்பட்டது.