அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி சுவரொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 45 வயதான இந்தியர் ஒருவரும் 24 வயதான இளைஞரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.