பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறப்பு

274 0

காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகம், இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி உபுல் பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இடையே ஒருவகை காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த 4ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.

இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே காரணத்துக்காக மூடப்பட்டிருந்த ருகுணு பல்கலைக்கழகம் நேற்று முதல் கல்வி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.