உள்நாட்டு மீனவர்கள் கைது

321 0

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

புல்மோட்டை, கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கடற்படையினர், 3 டிங்கி படகுகளையும் தடைசெய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறையுடைய மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மீனவர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் குச்சவெளி காவற்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.