இலங்கைக்குள் புதிய சிகரெட் நிறுவனமா?

238 0

இலங்கைக்குள் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்ய தயாராகி வருவதாக வௌியான தகவல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சிகரெட் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமது சங்கம் நிபந்தனைகளற்ற ஆதரவளித்துள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் நலிந்த சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இவ்வாறு இருக்க, இலங்கைக்குள் புதிய சிகரெட் நிறுவனம் ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இது குறித்து ஆராய்ந்து, இதன் பின்னால் இருக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் நாட்டுக்கு வௌிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தமது சங்கம் முடிவு செய்துள்ளதாக, நலிந்த சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.