திருகோணமலை கிண்ணியா பகுதியில் 55 டைனமைட் குச்சிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 45 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவற்றை குறித்த நபர் முச்சக்கர வண்டியில் விற்பனைக்காக எடுத்துச் சென்ற வேளையிலயே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளும், கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள வெடி மருந்துகள் 138 கிராம் எனவும், அதன் பெறுமதி 38500 ரூபா எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.