படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு- மனுவல் பெரோரா(காணொளி)

219 0

 

யாழ்ப்பாண பட்டதாரிகளின் நிலமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவிடம் நிலைமையைத் தெரிவித்து நடைமுறைப்படி படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாணவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் மனுவல் பெரோரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அரச வேலைவாய்ப்புக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளை போராட்டம் நடாத்தும் இடத்தில் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார்.

எச்.என்.டி.ஏ கல்வி கற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியமை மற்றும் ஏனைய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியமை போன்று ஜனாதிபதி மைத்திரிபால சேனாவிற்கு பட்டதாரிகளின் நிலமையை சமர்ப்பித்து வடக்கு மாகாண பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் மனுவல் பெரோரா தெரிவித்தார்.

பட்டதாரிகளின் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் பட்டதாரிகளின் போராட்டம் உந்துசக்தியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தமக்குரிய நியமனங்களை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகளின் பிரதிநிதி ரி.இந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.