வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா(காணொளி).

256 0

வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா, திருமதி சிவசக்தி அருந்ததி தலைமையில் இன்று நடைபெற்றது.

சுமார் 8 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட, பெரியம்மா முன்பள்ளியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா மற்றும் இந்திரராஜா, ஒமந்தை கிராம சேவையாளர் அனுஜா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் இராஜேஸ்வரன், வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசப்புத்தங்கள் வழங்கப்பட்டதுடன், முன்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.