வடமேற்கு ஈரானில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 25 பேர் பலியாகினார்.
ஈரானில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணித்தியாலங்கள் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக சாலைகள் உட்பட பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெள்ளம் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 25 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.