திருட முயன்றுள்ள 20 பேர் கைது

219 0

மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்ததினால் சேதமடைந்துள்ள வீடுகளில் உள்ள பொருட்களை திருட முயன்றுள்ள 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்ததினால் இடம்பெற்ற அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்தில் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 180 குடும்பங்களை சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.