நிதி மோசடி தொடர்பானவர் 7 வருடங்களின் பின்னர் கைது

380 0

jail 6654dசெலிங்கோ நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட ஃபினன்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் வைப்பிலப்பட்ட பெருந்தொகையான நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த சந்தேக நபர் ஒருவர் 7 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த பெண் ஒருவரே இவ்வாறு கைதானார்.

அவர் இந்த வழக்கின் எட்டாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டிருந்த யஸ்மின் மொஹமட் என்பவராவார்.

வெளிநாட்டில் வசித்து வந்த குறித்த பெண், நாடு திரும்பிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.