மகிந்த தரப்பினரை சந்தித்த ஜனாதிபதி

392 0

maithripala-sirisena11மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அவசர சந்திப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்திருந்தார்.

நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மகிந்த அதரவாளர்களால் நடத்தப்படவுள்ள பேரணி குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.