நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு(காணொளி)

246 0

நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை நீர் தாங்கியில் இருப்பதைக் கண்ட அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், சிறுவர்கள் அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், பொலிஸாரும் குறித்த சிறுத்தை குட்டியை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அண்மைகாலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.