மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்(காணொளி)

398 0

மாத்தறை வைத்தியசாலையில் மூன்றரை வயது குழந்தை மருத்துவர்களின் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்கக் கோரி பிரதேச மக்களால் வைத்தியசாலை முற்றுகையிடப்பட்டது.

மருத்துவர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்ட பிரதேச மக்கள் நேற்றைய தினம் காலை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

மாத்தறை ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது குழந்தையொன்றை அவர்களது பெற்றோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இனங்காணப்பட முடியாத ஒருவகை காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டு மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அவருக்கு எவ்வித சிகிச்சையும் மருத்துவர்களால் அளிக்கவில்லை என்று தெரிவித்த குழந்தையின் பெற்றோர், மருத்துவர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.