ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு சித்திரைப் புத்தாண்டின் பின்னர்

247 0

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

நேற்றைய கூட்டத்தில் கட்சியின் புதிய பதவி நியமனங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் சித்திரை புத்தாண்டின் பின்னர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக, கட்சியின் பொதுசெயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.