நாமலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்காலையில் ஆர்ப்பாட்டம்

371 0
Namal Rajapaksa (C), son of former Sri Lanka's President Mahinda Rajapaksa, leaves with prison officers at the court after being arrested in Colombo, Sri Lanka July 11, 2016. REUTERS/Dinuka Liyanawatte
Namal Rajapaksa (C), son of former Sri Lanka’s President Mahinda Rajapaksa, leaves with prison officers at the court after being arrested in Colombo, Sri Lanka July 11, 2016. REUTERS/Dinuka Liyanawatte

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தங்கல்ல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சி பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தின் பல விகாரைகளைச் சேர்ந்த தேரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டு எதிர்கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதகமானவர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியவாறு தங்கல்ல கால்டன் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து தங்கல்ல பஸ் நிலையம் வரை சென்று அங்கு ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக தமது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்தப் பகுதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து வழமைக்கு திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்து வரும் நல்லாட்சியை எதிர்ப்போம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.