சிறை செல்ல தயார் – விமல் வீரவன்ஸ

377 0

Wimalசிறைச் செல்ல தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

‘பிரதமரே தாங்களும் கட்டைக் காற்சட்டை அணிந்துக்கொண்டு சிறைசெல்வதற்கு எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்’ என விமல் வீரவன்ஸ பிரதமரின் முகத்திற்கு நேரே கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவின் மகனுடைய திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு சிரித்தவாறே பிரதமர் ரணில் ‘நாடாளுமன்றமே சிறைதானே’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த திருமண நிகழ்விற்கு பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.