வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

406 0

vavuniyaஇந்தியா தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியாவில் இளைஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார்.

மாட்டு இனங்களைப் பாதுகாப்போம், தடை அதை உடை, ஜல்லிக்கட்டு நம் இனத்தின் அடையாளம், காப்போம் காப்போம் மாட்டைப் பாதுகாப்போம், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம், போன்ற வாசகங்களுடன் கோசங்களை எழுப்பியவாறு பெருமளவான இளைஞர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.

நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.