சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு(காணொளி)

337 0

pathivu thirumanamபுத்தளத்தில் சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

புத்தளத்தில் சட்ட பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களை பதிவுத் திருமணம் செய்து வைக்கும் பணிகளை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதற்கமைய முந்தல் பிரதேச செயலகத்திற்கு, பகுதியில் மூன்று ஜோடிகளுக்கு நேற்று காலை மதுரங்குளி நகரில் அமைந்து சேவை இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இதன்போது முந்தல் பிரதேச செயலக அதிகாரிகள் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.