தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை-ஜனநாயகப் போராளிகள் கட்சி;(காணொளி)

314 0

battiதமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை என, ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும், இவர்கள் முன்னாள் போராளிகளைப் பகடைக்காய்களாக மீண்டும் மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இராசையா கதிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில்  நேற்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இராசையா கதிர், மற்றும் கொள்ளை பரப்புச் செயலாளர், மட்டக்களப்பு அம்பாறை கட்சியின் இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.