மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

316 0

downloadயாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய பொன்னம்பலம் பதுமநிதி என்பவரை 2008 ஜனவரி 9ஆம் திகதி தடியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மாமியாரைத்தாக்கிய மருமகனாகிய தர்மலிங்கம் சௌந்தர்ராஜாக்கு எதிராக கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இறந்தவருடைய வயது, நடைபெற்ற சூழ்நிலை மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய தடி ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்து தீரப்பு வழங்கப்பட்டுள்ளதா க நீதிபதி தனது தீரப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பில் குற்றவாளி 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் வழங்க வேண்டும் என்றும் அதனைச் செலுத்த தவறுமிடத்தில் மேலதிக ஒருமாத தண்டனை வழங்கப்படும் என்றும் தீரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.