இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா செய்யத் தீர்மானம்

315 0

thilruksiஇலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றதை தான் மிகவும் அருவருப்புடனும், மோசமாகவும் கண்டிப்பதாக நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட இந்த கருத்து தொடர்பிலேயே இலஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.