இருவேறு விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

291 0

அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற விபத்தி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பாதெனியவில் இருந்து கல்கமுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையில் கவிழ்ந்து எதிர்திசையில் வந்த வேனுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

தலாவ பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை பண்டாரகம – கெஸ்பேவ வீதியின் பொலபொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பாதையில் சென்ற பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பண்டாரகம பகுதியை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

விபத்து சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.