குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது

308 0

கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த காலப்பகுதியில் 26,425 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பண்டிகைகாலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக நாடளவிய ரீதியில் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு ஈடுபட்டு வருதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.