இ.போ.ச. பஸ் மோதி வயோதிபர் பலி

297 0

வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரியபொல – சிலாபம் வீதியில் ரம்பாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சிலாபம் நோக்கி புறப்பட்ட இ.போ.ச. பஸ் ஒன்று இன்று அதிகாலை 05.20 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த நபர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

கல்லேபிட்டி, கன்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.