கடந்த 24 மணித்தியாலங்களில் 289 பேர் கைது-பொலிஸ்

310 0

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸார் நடத்திய விஷேட நடவடிக்கையில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (12) காலை 06.00 மணி முதல் இன்று (13) காலை 06.00 மணி வரை இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

அதேவேளை போக்குவரத்து குற்றங்களுக்காக 9604 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி கடந்த 11ம் திகதி முதல் இதுவரை 534 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19774 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.