மரண தண்டனை கைதியை கொலை செய்த மரண தண்டனை கைதிகள்

260 0

மரண தண்டகை பெற்றுள்ள இரண்டு சிறைக் கைதிகள் இணைந்து மற்றொரு மரண தண்டனை பெற்ற சிறைக் கைதியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இன்று (16) பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோகந்தரை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தண்டனை பெற்றுள்ள 39 வயதுடைய மேனக சஞ்சீவ என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave a comment