முன்னைய அதிவிசேட வர்த்தமானியை செயற்படுத்துங்கள் – ஜே.வி.பி.

256 0

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு இன்று மாலை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு ஏற்ப, பழைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் செயற்பாட்டுக்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதியினால் நாளை (14) பாராளுமன்றம் கூடும் என தெரிவித்து விடுக்கப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா இன்று (13) தெரிவித்துள்ளார்.

விகாரமாக தேவி பூங்காவில் இடம்பெற்ற 29 ஆவது கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு இறுதியானது அல்லவெனவும், எதிர்வரும் காலத்தில் எந்தவொரு சூழ்ச்சிகளுக்கும் முகம்கொடுக்க தமது கட்சி தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment