நாளை பாராளுமன்றம் கூடும் – சபாநாயகர் விசேட அறிவிப்பு

264 0

உயர் நீதிமன்றம் இன்று மாலை வழங்கிய தீர்ப்பையடுத்து நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் சற்று முன்னர் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சபாநாயகரின் அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 4 ஆம் திகதி அதிவிசேட அறிவித்தல் மூலம் நாளை 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவித்தல் விடுத்திருந்தார். இந்த அறிவித்தலின் பிரகாரமே நாளை பாராளுமன்றம் கூடுவதாகவும் சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment