சீன நாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனப் பிரஜை

Posted by - December 13, 2017

சட்டவிரோதமான முறையில் சீனாவில் இருந்து ஒருதொகை சிகரட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க பிரிவின் போதை தடுப்பு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல். – 881 என்ற விமானத்தில் சந்தேகநபர் வருகை தந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 155 சிகரட் பெட்டிகளில் 31,000 சிகரட்டுக்கள் இருந்துள்ளதுடன்,

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை: மரண தண்டனைக் கைதியின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!!

Posted by - December 13, 2017

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த மனுவை, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தேவிகா தென்னகோன் மற்றும் எஸ்.துறைராஜா ஆகியோர் தீர்மானித்துள்ளனர். 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய சந்தேகநபரான ஜோன்ஸ்டன் கொலின்

287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - December 13, 2017

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 287ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமிருக்கின்ற தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என கேப்பாப்புலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளர்.இந்த நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த காணிகளை முழுமையாக விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சரால் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.இதனால், மலரவுள்ள

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எழுவருக்கு 56 வருட கடூழியச் சிறைத் தண்டனை!

Posted by - December 13, 2017

வில்பத்து வனப்பகுதியில் கெப் வண்டி மீது கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தி, மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.மன்னார், வவுனியா, சாவகச்சேரி, மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.எட்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர்

பிரபாகரனை சிலர் விண்ணில் தேடுகிறார்கள்… சிலர் மண்ணில் தேடுகிறார்கள்!

Posted by - December 13, 2017

தமிழீழ  தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சகோதரன்  வேலுப்பிள்ளை மனோகரனுடனான செவ்வி. 1

விவசாயத்தில் நட்டம்: விவசாயி தீ மூட்டி தற்கொலை

Posted by - December 13, 2017

யாழ்ப்பாணம் வதிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அல்வாய் தெற்கு வதிரியை சேர்ந்த மார்கண்டு உதயதாசன் ( வயது 60) என்ற விவசாயியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆண்டும் கடந்த ஆண்டும் விவசாயம் செய்த போதும் அதில் போதியளவு இலாபமில்லாது நட்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மனவிரக்கத்தியடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டிற்கு மது போதையில் சென்ற இவர் வீட்டில் தனியே

அவைத் தலைவரை முதல்வர் என்று கூறிய விக்கி!

Posted by - December 13, 2017

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் என கூறியமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது. முதலாவது வடக்கு மாகாண சபையின் 112 ஆவது அமர்வு மாகாண சபை பேரவைச் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலமைச்சரின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கையை சமர்ப்பித்து முதலமைச்சர் உரையாற்ற முற்பட்ட போது கௌரவ முதலமைச்சர் என அவைத் தலைவரைப் பார்த்து விளித்த போது

கின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்

Posted by - December 13, 2017

காலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது. காலிமுகத் திடலில் நடைபெற்ற மூன்று நாள் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மரத்தின் உயரம் 72.1 மீற்றர் – அதாவது, 236 அடியும் 6.58 அங்குலம்

ஐ.தே.கவே தமிழ் பேசும் மக்களை அரவணைக்கும் ஒரே கட்சி – விஜயகலா

Posted by - December 13, 2017

சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.சாவகச்சேரி நகரசபைக்கு நேற்று கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “யாழ்ப்பாணத்தில் ஏனைய கட்சிகள் கூட்டாக சேர்ந்து போட்டியிடும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடுகின்றது. ஆரம்பத்திலேயே சிறுபான்மை மக்களை இணைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் சிறுபான்மை

அரசியலமைப்பு தோற்கடிக்கப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்களே பொறுப்பு

Posted by - December 13, 2017

உத்தேச அரசியலைப்பை தோற்கடிக்க செய்த பொறுப்பை மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டின் போது தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் பேராசிரியர் குணதாச அமரசேகர இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.