287ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

222 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 287ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமிருக்கின்ற தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என கேப்பாப்புலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளர்.இந்த நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதி குறித்த காணிகளை முழுமையாக விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சரால் தெரிவிக்கப்பப்பட்டுள்ளது.இதனால், மலரவுள்ள புதிய ஆண்டில் எமது மண்ணில் குடியேறி வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment