அவைத் தலைவரை முதல்வர் என்று கூறிய விக்கி!

478 0

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் என கூறியமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது.

முதலாவது வடக்கு மாகாண சபையின் 112 ஆவது அமர்வு மாகாண சபை பேரவைச் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலமைச்சரின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ் அறிக்கையை சமர்ப்பித்து முதலமைச்சர் உரையாற்ற முற்பட்ட போது கௌரவ முதலமைச்சர் என அவைத் தலைவரைப் பார்த்து விளித்த போது சபையில் அவைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பொழி எழுந்தது.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட முதலமைச்சர் நான் எதிர்காலத்தைப் பற்றியே பேசியுள்ளேன் என்று கூற இப்படி தான் பலரும் பலவற்றைக் கூறி வருகின்றனர் என்று அவைத் தலைவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இதன் பின்னர் முதலமைச்சர் அறிக்கையை சமர்ப்பித்து விவாதத்தையும் ஆரம்பித்து வைக்க எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் உரையாற்றினர்.

இதன் பின்னர் முதல்வரும் பதில்களை வழங்கியதையடுத்து சபையில் அறிக்கை அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment