ஐ.தே.கவே தமிழ் பேசும் மக்களை அரவணைக்கும் ஒரே கட்சி – விஜயகலா

237 0

சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.சாவகச்சேரி நகரசபைக்கு நேற்று கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாணத்தில் ஏனைய கட்சிகள் கூட்டாக சேர்ந்து போட்டியிடும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடுகின்றது. ஆரம்பத்திலேயே சிறுபான்மை மக்களை இணைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரே செயலாளராக உள்ளார். அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சகல தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆசனங்களை கைப்பற்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment