விவசாயத்தில் நட்டம்: விவசாயி தீ மூட்டி தற்கொலை

276 0

யாழ்ப்பாணம் வதிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அல்வாய் தெற்கு வதிரியை சேர்ந்த மார்கண்டு உதயதாசன் ( வயது 60) என்ற விவசாயியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆண்டும் கடந்த ஆண்டும் விவசாயம் செய்த போதும் அதில் போதியளவு இலாபமில்லாது நட்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் மனவிரக்கத்தியடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டிற்கு மது போதையில் சென்ற இவர் வீட்டில் தனியே இருந்த தனது மனைவியை வீட்டு வளவிற்கு வெளியே கலைத்துவிட்டு தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துள்ளார்.

உடனடியாக இவரை மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரனையை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதையடுத்து சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a comment